Sunday, March 02, 2008

பசியின் பதிவுகள் (கவிதை)



வரவேற்பறை
அலங்கரிப்புக்கு
வண்ண வண்ண
ஓவியங்களுக்குப்பதில்
*
சோமாலியாக் குழந்தைகளின்
கண்களில்
நிரம்பித் ததும்பும்
சோகங்களை

*
எண்ணிவிடுகிற
நெஞ்செலும்புகளை
அவற்றுக்குக்கீழே
குழிந்து போன
வயிறுகளை

*
உயிரின் வாதைகளை
பசியின் பதிவுகளை
பத்திரிக்கை நறுக்குகளை

செவ்வகச்சட்டங்களில் ஏற்றி
சுவற்றில் மாட்டினால் என்ன
எனத்தோன்றுகிறது

*
அவை
என்றேனும் ஒருநாள்
நெஞ்சில் ஆணியறைந்து
நினைவைக் குடைந்து
இதயத்திலிருந்து
வற்றிப்போகாத
ஈரக்கசிவை
ஏற்படுத்தக்கூடும்

குறிப்பு: இந்தக் கவிதை இன்று தமிழ்முரசு இதழில் (2-Mar-2008) வெளிவந்துள்ளது.

Labels:

3 Comments:

At 10:46 AM, Anonymous Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.

 
At 4:50 PM, Blogger anujanya said...

நல்ல கவிதை என்பதைவிட மனதைத் தைக்கும் கவிதை. குற்ற உணர்ச்சியுடன் மிகவும் சிந்திக்க வைத்தது.

அனுஜன்யா

 
At 2:21 PM, Blogger செம்மதி said...

உங்கள் கவிதையைப் படிக்கும் போது ஈழத்தில் அரைப்பட்டினி யாக உள்ள தமிழரின் ஞாபகம்
வருகிறது.
செம்மதி

 

Post a Comment

<< Home