Saturday, September 30, 2006

கவிதை - வெடிப்புக்குப்பிறகு . . .

வெடிப்புக்குப்பிறகு
தாறுமாறாகத்
தகர்க்கப்பட்டிருந்த
ரயில்பெட்டி!
கால்ச்சட்டையோடு
கழன்றுபோய்த்
தொங்கிக்கொண்டிருந்த
கால்!
அதிலிருந்து
சொட்டிக்கொண்டிருந்த
இரத்தம்!
நசுங்கிய
ஜன்னல்!
அதனை இன்னும்
பற்றிக்கொண்டிருந்த
கை!
அங்கங்கே
திட்டுத்திட்டாக
மனிதச்சதைகள்!
இரத்தக்கரைகள்!
அத்தனையும்
பார்த்துக்கொண்டிருந்தது
பிய்த்து எறியப்பட்ட
தண்டவாளத்துண்டில்
ஒட்டிக்கொண்டிருந்த
ஒற்றைக்கண்!
அதனால்
பதிந்த காட்சிகளை
மூளைக்கனுப்ப
முடியவில்லை!
காரணம்
மூளை
சற்று தூரத்தில்
பிசு பிசுவென்று . . .!

Written on July 13 - 2006 Mumbai Train bomb blasts

0 Comments:

Post a Comment

<< Home