Friday, November 17, 2006

சமூகப்பணியில் நகரத்தார்கள் என் தலைப்பு

சமூகப்பணியில் நகரத்தார்கள் என் தலைப்பு
--------------------------------------------------------------
. . . . .
அது என்ன கண்ணுக்குத்தெரியாத சமூகப்பணி?
அதுதான் நமது அன்றாடப்பணி!

சமூகம் என்பதை
உயர்ந்த கட்டடமாகக் கொண்டால்-அதன்
ஒவ்வொரு செங்கல்லும்
ஒவ்வொரு குடும்பம்தானே?
சமூகம் என்பது குடும்பங்களின் கூட்டுத்தொகைதானே?

ஆகவே சமூகத்தில் நம் இன்றைய
இருப்பின் தன்மையையும், இருக்கும் சவால்களையும் ஆராய்வதே
சிறப்பாய் இருக்கும் எனச் சிந்தித்தேன் - சில சங்கடங்களைச் சந்தித்தேன்

அதிகரிக்கும் விவாகரத்துக்கள் அபாய அறிவிப்பு செய்தன!
போதை மருந்தென்னும் பொல்லாத அரக்கன் திரும்பிய பக்கமெல்லாம் திகிலூட்டினான்!
இணையத்தின் மூலம் இன்னல்கள் எச்சரிக்கை மணி அடித்தன

வெளி உலக ஆகர்சனம்
இளைய மனங்களை இழுத்துப்போட
வலையை விரித்துக்கொண்டு வா வா என காத்திருக்கிறது!

நாமோ,
பெற்றோரை ஊரில் விட்டு
உறவுகளையும் உதறி விட்டு
தம்பதிகள் சமேதராய்
வேலைக்குச்சென்று
வேலைச்சக்கரங்களில் மாட்டி
சாறு பிழியப்பட்டு
சக்கையாக
வீரியம் குறைந்து
வீடு திரும்புகிறோம்! நம்மால்
அரவணைப்பதும் அன்பு வளர்ப்பதும்
எங்ஙனம் சாத்தியம்?

குடும்பம் கவனிக்கப்பட வேண்டும்
குடும்பத்தின் பாதுகாப்பு அதிகதிகமாய்க் கவனிக்கப்பட வேண்டும்

ஆகவே ஆச்சிகளே,
அண்ணன்கள் சம்பாதித்துக் கொண்டு வருவார்கள்
நீங்கள் தொலைக்காட்சியிலும் தொலைபேசியிலும் நேரத்தைத் தொலைத்து விடாமல்
அவர்களின் மன உளைச்சலை மட்டுப்படுத்துங்கள்!
கால் அமுக்கி விடுவதோடு கவலைகலையும் சற்றே அமுக்கி விடுங்கள்!
உறவுகளோடு உங்களை இணைத்துக் கொள்ளுங்கள்!
உங்கள் சகசமூகத்தாரோடு சங்கமியுங்கள்!
உங்கள் அக்கம் பக்கத்தில் அன்போடு பழகுங்கள்!
மனிதர்களோடு பேசுங்கள்
அவரோடு பேசினால் கடித்து விடுவாரோ?
இவரோடு பேசினால் உதைத்து விடுவாரோ?
என் எண்ணாதீர்கள்
மனிதர்களைக் கொண்டாடுங்கள்
குறைந்த பட்சம் சிரியுங்கள் (இளித்த வாயன் என்றூ சொல்பவர் சொல்லட்டும்)
அந்த சிரிப்பு சிக்கன்குனியா போல பரவட்டும்!
நாம் பரப்பவேண்டியதைப் பரப்புவதில்லை
பரப்பக்கூடாததைப் பரப்புவோம்!
நோய்களைப் பரப்புவோம், அன்பையும் சிரிப்பையும் அடக்குவோம்!

செலவே இல்லாத அன்பில்
சிறிது எடுத்து உங்க பிள்ளைகளிடம் காட்டுங்கள்
10 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அதே அன்பில்
இன்னும் கொங்சம் எடுத்து உங்க எதிரிகளிடம் காட்டுங்கள்
100 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு

அட 10ம் வேண்டாம் 100ம் வேண்டாம் 1 கோவில் கட்டிய புண்ணியம் உங்களுக்கு வேண்டுமா?
உங்க கணவர்ட்ட அன்பா நடந்துக்குங்க அது போதும்!

சுருக்கமாகச் சொன்னால்
உங்கள் குடும்பத்தைக் கோயில் ஆக்குங்கள்!!

அதுவே நம் குடும்பத்திற்கும்
நம் சமுதாயத்திற்கும்
நாம் ஆற்றுகிற மிகச்சிறந்த சமூகப்பணியாகும்!!!

-நன்றி ! வணக்கம்!!

0 Comments:

Post a Comment

<< Home