Sunday, November 01, 2009

படைப்புக்கடவுளின் உத்தி

விழாமேடையில்
மூன்றாவது
கட்டபொம்மனின்
வீரவசனம்
மஞ்சள்
அரைத்துக்
கொண்டிருந்தது!

இன்னும் ஐந்து
பாரதிகளின்
மீசைகள்
துடிக்கக்
காத்திருந்தன!

மனிதனுக்கு
மாறுவேடப்
போட்டிகளில் கூட
மாற்றங்கள்
சாத்தியமாகவில்லை!

அதெப்படி
கடவுளுக்கு மட்டும்
தினந்தோறும்
புது முகங்கள்
தீர்ந்து போகாமல்
கிடைத்துக் கொண்டே
இருக்கின்றன?

படைப்புதோறும்
மாற்றம் காட்டுகிறான் கடவுள்
பள்ளிகள் தோறும்
நகல் எடுத்துக் கொண்டிருகிறான் மனிதன்

Labels: ,

0 Comments:

Post a Comment

<< Home