உயர்வைத் தந்த சிங்கப்பூர்
ஊரில் இருந்து
உழைக்க வந்த
வந்தேறி தான்நான்
உயர்வைத் தந்த
சிங்கப் பூரை
நினைத்துப் பார்க்கிறேன்
பாதை தோறும்
இவள் உயர்வைப்
பார்த்து மகிழ்கிறேன்
அடுக்கு மாடி
வீடு கட்டி
அழகு பார்க்கிறாள்
வீட்டின் மேலே
தோட்டம் போட்டு
விண்ணைத் தொடுகிறாள்
மண்ணைத் தோண்டி
சுரங்கம் வைத்து
இரயில்கள் விடுகிறாள்
அழகு மலர்களாகத்
தீவு முழுதும்
மலர்ந்து மணக்கிறாள்
கூட்டிக் கழித்துக்
கணக்குப் பார்த்துக்
கொள்கை வகுக்கிறாள்
அடுத்து அடுத்துச்
செய்யும் பணி
திட்ட மிடுகிறாள்
துறைகள் தோறும்
தொடர்ந்து மாற்றம்
செய்து பார்க்கிறாள்
உழைத்து உயர்ந்தும்
போதும் என்று
ஓய மறுக்கிறாள்
அழைத்துச் சென்று
அகிலம் முழுக்கக்
காட்டிச் சொல்கிறேன்
இவளைப் போல
அவர்கள் மாற
இதனைச் செய்கிறேன்
அழகுத் தீவை
நினைத்துப் பார்த்து
புல் அரிக்கிறேன்
ஆசை தீரத்
தழுவிக் கொள்ள
ஆசைப் படுகிறேன்
அடுத்த நாளே
அவள் மகனாய்
ஆகிப் போகிறேன்!
Labels: கவிதை

0 Comments:
Post a Comment
Links to this post:
Create a Link
<< Home