Sunday, March 11, 2012

கவிச்சோலையில் வா.மு.சே. திருவள்ளுவர் சிறப்புரை

============================================================

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமுக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கவிச்சோலை சனிக்கிழமை 4.2.2012ல் நடைபெறவிருக்கிறது.

பெக் கி்யோ சமுக மன்றத்தில் சனிக்கிழமை இரவு மணி 7.00க்குத் தொடங்கும் கவிச்சோலை நிகழ்ச்சியில் தமிழகத்தின் முதுபெரும் கவிஞரான பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்களின் புதல்வரும் எழுத்தாளருமான திரு. வா.மு.சே. திருவள்ளுவர் "எனது வெளிநாட்டுப் பயணங்கள்" எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றுவார்.

அத்துடன் அவர் எழுதியுள்ள "தொட்டனைத் தூறும்" எனும் பயண நூலும் அறிமுகம் காணும். முதல் நூலை தமிழ் வள்ளலும் சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகப் புரவலருமான உயர்திரு. நாகை தங்கராசு எனும் போப் ராஜூ பெற்றுக்கொள்வார்.

இம்மாதக் கவிதைத் தலைப்பு "வேதனையில் விளைந்த வெளிச்சம்". இந்தத் தலைப்பில் கவிதை எழுதி வருமாறு கவிஞர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சிறந்த மூன்று கவிதை ஒவ்வொன்றுக்கும் 30 வெள்ளி பரிசு வழங்கப்படும்.

வழக்கம்போல் வடித்த, பிடித்த, ரசித்த கவிதை அங்கமும் உண்டு.

கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், தமிழன்பர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனுமதி இலவசம்.

அன்புடன் அழைப்ப்து:- நா. ஆண்டியப்பன்

என்றும் அன்புடன் தியாக.இரமேஷ்..

Labels:

0 Comments:

Post a Comment

<< Home