Sunday, February 25, 2007

இப்படியாக உலகம் . . .

நிழல்களும் நிஜங்களுமாக
பின்னிக்கொண்டு உலகம்!

சூழலே சூல் கொள்வதால்
நிஜங்களும் நிழல் விழுங்கியே இருக்கின்றன!

நிழல்களின் தாறுமாறான
உளித்தாக்குதல்களில்
கரடுமுரடாக
உருவாக்கப்படுகிறான் மனிதன்!

நிழல்கள் பிருமாண்டமாகி
மனிதனை மொத்தமாக
வாரிச்சுருட்டி
உள்ளிழுத்துக் கொண்டிருக்கின்றன!

நிழல்கள் பெரிதாகி
மேலும் பெரிதாகி
ஒளிதின்று
இரவாகி விட்டன!

நிழல்கள் நீண்டு பெருத்து
பூதங்களாகி பயம் காட்டுகின்றன!

இப்படியாக
சுற்றிக்கொண்டிருக்கிற
பூமிப்பந்தில்
இலக்கு இல்லாமல்
ஊர்ந்து கொண்டிருக்கிறதுபொய்ப்பயணம்!

Labels:

Tuesday, February 20, 2007

யாராகினும் மனிதன்

தாயோ தாரமோ
தந்தையோ பிள்ளையோ
ஊரோ உறவோ
யாராகினும் மனிதன்
அன்புக்கு ஏங்கிடும் ஆன்மா!

நீ
நினைத்தால்
மயிலிறகால்
மனம் வருடலாம்
ஆதரவாய்ப்பேசி
ஏக்கம் போக்கலாம்
கண்களால்
கைது செய்யலாம்
சிரித்துச்
சிறையெடுக்கலாம்
காது கொடுத்துக்
கவலை தீர்க்கலாம்
கண்டு
கொள்ளாமலும்
இருந்து விடலாம்
தள்ளி
வைத்தும்
தண்டனை தரலாம்

என்ன செய்யப்போகிறாய் நீ?

ஒரு சொல் போதும்
சில்லுகளாய் உடைத்துப்போட

ஒரு பார்வை போதும்
அன்பால் கட்டிப்போட

ஒன்றும் செய்யாதிருந்தால் போதும்
உணர்வுகளைக் கொன்றுபோட

என்ன செய்யப்போகிறாய் நீ?

குறைந்த பட்சம்
செலவில்லாமல் புன்சிரித்து
வரவு வைத்துக்கொள் உன் கணக்கில்!

Labels:

Sunday, February 18, 2007

பார்ப்பது கேட்பது உணர்வது கூட. . .

‘நான் ஒரு எறும்பைக் கொன்றேன்
என் பிள்ளைகள் நிசப்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்’

என்றொரு வெளிநாட்டுக் கவிதை படித்தேன்
தொடர்ந்தொரு சிந்தனை தொற்றிக் கொண்டது

நாம் கோபப்படுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிவப்பு விளக்கில் சாலை கடக்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சாலை நடுவில் குப்பை போடுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிறு குற்றங்கள் செய்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பிள்ளைகள் மனசு
வெள்ளைக் காகிதம்
பதிந்து கொள்ளும் ஒரு
பச்சை மரம்

மறந்தே போகிறோம்
மரத்தில் பதிகிறோம்
வெள்ளைத்தாளில் கரும்புள்ளிகள்
காட்சியாய்ப் பதியுமன்றோ?

உயர்ந்த லட்சியம்
ஊட்டி வளர்ப்பதை
உணர வில்லையே நாம்!

நாட்டின் தூண்களைக்
கேட்டினைச் செய்யத்
தூண்டுதல் செய்கிறோமே

வன்முறை சினிமா
பிள்ளைகள் கெடுக்கும்
தடுக்க வில்லையே நாம்?

நல்ல கதைகளைச்
சொல்லி வளர்ப்பதைச்
செய்ய வில்லையே நாம்?

உணவில் மட்டும்
சத்துகள் இருப்பின்
உடல்தான் வளருமன்றோ?

பார்ப்பது கேட்பது
உணர்வது கூட
சத்தாய் இருக்கணுமே!

Labels:

Saturday, February 17, 2007

பச்சை மரங்கள்

‘நான் ஒரு எறும்பைக் கொன்றேன்
என் பிள்ளைகள் நிசப்தமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்’

என்றொரு வெளிநாட்டுக் கவிதை படித்தேன்
தொடர்ந்தொரு சிந்தனை தொற்றிக் கொண்டது

நாம் கோபப்படுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிவப்பு விளக்கில் சாலை கடக்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சாலை நடுவில் குப்பை போடுகிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

நாம் சிறு குற்றங்கள் செய்கிறோம்
நம் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

பிள்ளைகள் மனசு
வெள்ளைக் காகிதம்
பதிந்து கொள்ளும் ஒரு
பச்சை மரம்

மறந்தே போகிறோம்
மரத்தில் பதிகிறோம்
வெள்ளைத்தாளில் கரும்புள்ளிகள்
காட்சியாய்ப் பதியுமன்றோ?

உயர்ந்த லட்சியம்
ஊட்டி வளர்ப்பதை
உணர வில்லையே நாம்!

நாட்டின் தூண்களைக்
கேட்டினைச் செய்யத்
தூண்டுதல் செய்கிறோமே

வன்முறை சினிமா
பிள்ளைகள் கெடுக்கும்
தடுக்க வில்லையே நாம்?

நல்ல கதைகளைச்
சொல்லி வளர்ப்பதைச்
செய்ய வில்லையே நாம்?

உணவில் மட்டும்
சத்துகள் இருப்பின்
உடல்தான் வளருமன்றோ?

பார்ப்பது கேட்பது
உணர்வது கூடசத்தாய் இருக்கணுமே!

குறிப்பு: நான் முன்பு எழுதிய கவிதை இது. இன்று படித்த போதும் பிடித்தது. பதிவில் போட விரும்பினேன்.

Labels:

Sunday, February 11, 2007

இறுதிப்பயணம்

பயணநாள் நெருங்க நெருங்க
பதட்டம் அதிகமாகியது

மூட்டை முடிச்சுக்கள்
மூன்று வண்டிகளில்
முடிந்த மட்டும் எடுத்துக்கொண்டேன்

உடுத்திக் கொள்ள விதவிதமான உடைகள்
உண்ண வகைவகையாய் உணவு வகைகள்
படிக்கப் புத்தகங்கள்
படுக்க மெத்தைகளோடு
செலவளிக்கப் பணம்

சிறுகச்சேர்த்த தங்கம் வெள்ளியோடு
வாழ்நாள் சேமிப்புக்களையெல்லாம்
வாரிச்சுருட்டிக் கொண்டேன்
பல கட்டங்களில்
பயணச்சோதனைகள்

முதல் சோதனையில்
உணவுக்குத்தடை

இரண்டாம் சோதனையில்
உடைகளுக்கும் தடை

மூன்றாம் சோதனையில்
குண்டுமணியளவு தங்கமும்
கொண்டுசெல்லக்கூடாதாம்
வெள்ளியோடு
வெள்ளிப் பணத்தையும்
விட்டு விட ஆணை

முடிவில்
முழுவதும் விட்டுவிட்டு
ஆடைகளும் களைந்துவிட்டு
ஆள் மட்டும் காத்திருந்தேன்

இறுதிச்சோதனையில்
உடம்பையும் தவிர்த்து
ஆவிக்குமட்டுமே
கிடைத்தது
அனுமதி!

பாவிநான் நினைத்தேன்..
கோடிசேர்த்தும்
கொண்டு செல்வதொன்றுமிலையே!

ஓடிச்சேர்த்ததெல்லாம்
ஒட்டாமல் போனதென்றேன்
கூட்டிச்சேர்த்ததெல்லாம்
கூடவரவில்லையென்றேன்
வேதனை மிகுந்ததென்றேன்
வேறென்ன கூடவருமென்றேன்?
நீசெய்த தருமங்கள்
நிச்சயம் வருமென்றார்!

நான் என்ன செய்தேன்?
நான் என்ன செய்வேன்?

குறிப்பு: இன்று (11-feb-2007) சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்துள்ளது.

Labels:

Sunday, February 04, 2007

அழ(ல)குத்திருவிழா

சிறப்பாக ஒரு விழா!
சிங்கைத் தைப்பூசத் திருவிழா!
இது சிலிர்ப்பான ஒரு உலா!

பால்குடங்கள்
காவடிகள்
சந்தன மொட்டைகள் தாண்டி
இனம்
மொழி
மதம் தாண்டி
தைப்பூசம் தந்ததென்ன?

ஆயிரமாயிரம் பேர்
அலகு குத்தினர்
வலியை மறந்தனர்
உண்ர்ந்து பார்த்தனர்
ஆடிப் பாடினர்
கூடிக் கொண்டாடினர்

ஆயிரமாயிரம் பேர்
கண்டு மகிழ்ந்தனர்
உண்டு மகிழ்ந்தனர்
பேசி இருந்தனர்
சேவைகள் புரிந்தனர்

பலப்பலவாய்
அனுபவங்களைப்
பலருக்கும் தந்து
பயன் தந்ததே
இப்பூசத் திருவிழா!

நேற்றைப் போல இன்றும்
இன்றைப் போல நாளையுமாகத்
தடம் மாறாமல் வாழ்க்கை
ஒரே மாதிரியாய்
ஓடிக்கொண்டிருக்கையில்
அனுபவங்களைப்
பயிற்சிகளை
அள்ளித்தந்ததே
இந்த அழ(ல)குத்திருவிழா!

குறிப்பு: இன்று (04-feb-2007) சிங்கப்பூர் தமிழ்முரசில் வெளிவந்துள்ளது.

Labels: